search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதலன் கைது"

    • சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் ரிஷப் நிகம் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
    • பட்டாசு சத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்ட சத்தம் தங்களுக்கு கேட்கவில்லை என ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மும்பை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் வந்தனா திவேதி (வயது26). இவர் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    புனே ஹின்ஜேவாடி பகுதியில் உள்ள ஓட்டலில் கடந்த சனிக்கிழமை இரவு வந்தனா திவேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரை படுகொலை செய்ததாக அவரது காதலன் ரிஷம் நிகமை(30) போலீசார் நவிமும்பையில் கைது செய்தனர். சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் ரிஷப் நிகம் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதன் மூலம் அவர் தான் கொலையாளி என்று கருதிய போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கொலை நடந்த இரவு ஹின்ஜேவாடி பகுதியில் மராத்தா சமூக இடஒதுக்கீடு வெற்றி கொண்டாட்டம் நடந்து உள்ளது. அப்போது அதிகளவு பட்டாசு வெடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நேரத்தில் ரிஷப் நிகம், வந்தனா திவேதியை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். அவரது தலை, கழுத்து பகுதியில் 4 குண்டுகள் பாய்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உள்ளார். பட்டாசு சத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்ட சத்தம் தங்களுக்கு கேட்கவில்லை என ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    மேலும் பெண் ஐ.டி. ஊழியர் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வந்தனாவும், ரிஷப்பும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கத்தில் இருந்து உள்ளனர். 2 பேரும் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்கள். வேலை காரணமாக வந்தனா புனேக்கு வந்து உள்ளார். அதன் பிறகு 2 பேரின் உறவில் விரிசல் ஏற்பட்டது. வந்தனா தன்னை விட்டுவிலகி செல்வதாக ரிஷப் நினைத்து இருக்கிறார். மேலும் சமீபத்தில் 2 முறை அவரை சிலர் தாக்கி உள்ளனர்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் வந்தனா இருப்பதாக அவர் நினைத்து இருக்கிறார். வந்தனா தன்னைவிட்டு வேறு நபருடன் செல்ல போவதாகவும் அவர் சந்தேகப்பட்டு உள்ளார். இதன் காரணமாக தான் கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து காதலர்கள் இருவரும் ஒன்றாக தங்கினார்கள்.
    • இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

    பெங்களூரு:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வைஷ்ணவ் (வயது 29). இவருக்கு கல்லூரியில் படிக்கும்போது தேவா (24) என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தனர். கோரமங்களா பகுதியில் உள்ள ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் இருவரும் வேலை பார்த்தனர். பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து காதலர்கள் இருவரும் ஒன்றாக தங்கினார்கள். தாலி கட்டாமல் அவர்கள் கணவன்-மனைவி போல குடும்பம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் தேவா நடத்தையில் வைஷ்ணவ் சந்தேகம் அடைந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

    நேற்றும் அவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு உருவானது. ஆத்திரம் அடைந்த வைஷ்ணவ் வீட்டில் இருந்த குக்கரை எடுத்து காதலியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த தேவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறிது நேரம் கழித்து தேவாவின் சகோதரி அவரது செல்போனில் தொடர்பு கொண்டார்.

    ஆனால் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தேவாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவரை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். உடனே அவரும் வைஷ்ணவ் வீட்டு கதவை தட்டினார். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் இது பற்றி அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தேவா கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

    தலைமறைவான வைஷ்ணவை போலீசார் தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.
    • போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஐதராபாத்தில் பச்சுப்பள்ளிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் பச்சுப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

    ஏப்ரல் மாதம் பிரமிளாவின் கணவர் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளியில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார்.

    அப்போது தனது ஊருக்கு பக்கத்து ஊர் ரோட் பாண்டா தாண்டாவை சேர்ந்த திருப்பதி (25) என்பவரை சந்தித்தார்.

    பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர்.

    பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது.

    இந்த நிலையில் திருப்பதியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்தனர்.

    இந்த தகவல் பிரமிளாவிற்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரமிளா திருப்பதிக்கு போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

    பிரமிளா உயிரோடு இருந்தால் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே பிரமிளாவை கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி பிரமிளாவிற்கு போன் செய்து பச்சுப்பள்ளி மெயின் ரோட்டுக்கு நேரில் வந்தால் திருமணம் குறித்து பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளி மெயின் ரோட்டில் திருப்பதியை சந்தித்தார். அப்போது திருமணம் செய்வது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த திருப்பதி அந்த வழியாக வந்த டேங்கர் லாரி முன்பாக பிரமிளாவை பிடித்து தள்ளினார். இதில் டேங்கர் லாரி பிரமிளா மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிரமிளா எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி இறந்து விட்டதாக திருப்பதி போலீசாரிடம் தெரிவித்தார்.

    போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.

    • இர்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கிசின் குடும்பத்திருடன் பெண் கேட்டுள்ளார்.
    • இர்பான் கடந்த 3 நாட்களுக்கு முன்பே நர்கிசை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் பூங்கா ஒன்றில் பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த விபரம் வருமாறு:-

    தெற்கு டெல்லியில் உள்ள மாளவியா நகரை சேர்ந்தவர் நர்கிஸ் (வயது 25). கல்லூரி மாணவியான இவர் நேற்று அப்பகுதியில் உள்ள விஜய் மண்டல் பூங்காவிற்கு சென்றார். அங்கு அவரது உறவினரான இர்பான் (வயது 28)என்பவரும் வந்துள்ளார்.

    இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இர்பான் இரும்பு கம்பியால் நர்கிசை சரமாரியாக அடித்து கொலை செய்தார்.

    பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் இர்பானை கைது செய்தனர்.

    விசாரணையில் அவரும், நர்கிசும் காதலித்து வந்தது தெரியவந்தது. இர்பான் ஒரு தனியார் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்துள்ளார். சமீபகாலமாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இர்பான் நர்கிசை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு நர்கிசின் குடும்பத்திருடன் பெண் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு நர்கிசை திருமணம் செய்து வைக்க நர்கிசின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் நர்கிஸ் இர்பானுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இது இர்பானுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எனவே தனக்கு கிடைக்காத நர்கிசை கொலை செய்ய திட்டமிட்ட அவர் நர்கிஸ் தினமும் செல்லும் பாதைகளில் அறிந்து வைத்தார்.

    மேலும் நர்கிஸ் பட்டப்படிப்பை முடித்து விட்டு மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்ததை பார்த்த இர்பான் கடந்த 3 நாட்களுக்கு முன்பே நர்கிசை கொலை செய்ய திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்த நிலையில் நேற்று பூங்காவில் நர்கிசுடன் வாக்குவாதம் செய்ததும், அப்போது இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக அடித்து கொலை செய்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ஜெயக்குமார் இளம்பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார்.
    • இளம்பெண் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். 2 தங்கைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், கல்லூரணியை சேர்ந்த ஜெயக்குமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்தனர்.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ஜெயக்குமார் இளம்பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார். அப்போது ஜெயக்குமார் கூறியதால் காதலி கர்ப்பத்தை கலைத்தாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் இளம்பெண் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார். அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் காதலனின் பெற்றோர் தாவீது (50), ஜெபமலர் (45), சகோதரி ஜான்சிமேரி (26) ஆகியோரிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் ஜெயக்குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறியதோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் எம்.ரெட்டியப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், அவரது பெற்றோர், சகோதரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.
    • மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.

    இந்நிலையில் மாணவியை அவளது காதலன் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு பணக்கஷ்டம் இருப்பதாகவும், தனக்கு பணம் கொடுத்து உதவுமாறும் காதலனிடம் மாணவி கேட்டிருக்கிறார். இதையடுத்து அவர், தனது நண்பர்கள் சிலரை சந்திக்குமாறு கூறி கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

    மாணவியும் காதலன் கட்டாயப்படுத்தியதன் காரணமாக, காதலனின் நண்பர்கள் 5பேரை சென்று சந்தித்திருக்கிறார். அப்போது அவர்கள் மாணவியை வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனால் அந்த மாணவி உடலளவில் பாதித்திருக்கிறார்.

    அதனுடனேயே பள்ளிக்கு மாணவி சென்றுவந்தபடி இருந்திருக்கிறார். மாணவி சோர்வாக இருந்ததை நோட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளது. ஆனால் மாணவி பள்ளி நிர்வாகத்திடம் முதலில் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்பு தனதுகாதலன் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்த விவரத்தை தெரிவித்திருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அதுகுறித்து சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதிப்புக்குள்ளான மாணவியிடம் சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த மாணவி, காதலன் மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆகவே அதுபற்றி சைல்டு லைன் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்ளிட்ட 6பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6பேரிடமும், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடியோவை பார்த்த வாலிபரின் நண்பர்கள் 2 பேரும் மாணவியை அடைய திட்டமிட்டனர்.
    • கடந்த ஒரு ஆண்டாக காதலனின் நண்பர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி.

    இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாலிபரும் மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் வாலிபர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். மாணவியை தனிமையில் அழைத்துச் சென்ற வாலிபர் அவருடன் உல்லாசமாக இருந்தார்.

    மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். வாலிபர் அந்த வீடியோவை தனது நண்பர்கள் 2 பேருக்கு அனுப்பி வைத்தார்.

    வீடியோவை பார்த்த வாலிபரின் நண்பர்கள் 2 பேரும் மாணவியை அடைய திட்டமிட்டனர். தங்களுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறினர். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்தார்.

    தங்களுடன் உல்லாசமாக இருக்க மறுப்பு தெரிவித்தால் காதலனோடு தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மாணவியை மிரட்டினர். இதனால் பயந்து போன மாணவி காதலனின் 2 நண்பர்களுடனும் உல்லாசமாக இருந்தார்.

    அதனையும் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் அவர்களின் நண்பர்கள் 3 பேருக்கு வீடியோவை அனுப்பி வைத்தனர்.

    அவர்களும் வீடியோவை காட்டி மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்தனர். கடந்த ஒரு ஆண்டாக காதலனின் நண்பர்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது.

    இதனால் விரக்தி அடைந்த மாணவி இது குறித்து அவரது உறவினர் ஒருவரிடம் தெரிவித்தார்.

    அவர் தனக்கு தெரிந்த போலீஸ்காரர் ஒருவர் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரை கூட்டு பாலியல் பலாத்காரம், மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டங்களில் கைது செய்தனர்.

    • ரோட்டில் இளம்பெண் ஒருவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஓடிவந்தார்.
    • திருவனந்தபுரம் போலீசார், ஆற்றிங்கல் சென்று அங்கு பதுங்கி இருந்த கிரணை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கழக்கூட்டம் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பொதுமக்கள் சிலர் டீக்கடைக்கு செல்ல ரோட்டில் நடந்து சென்றனர்.

    அப்போது இளம்பெண் ஒருவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறியபடி ஓடிவந்தார். சத்தம் கேட்டு மக்கள் அந்த பெண்ணை நோக்கி ஓடினர். அவர் உடலில் ஆடைகள் எதுவும் இல்லை. நிர்வாணமாக இருந்த அவர் கைகளால் உடலை மூடியபடி ரோட்டில் விழுந்து அழுது புரண்டார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், அந்த பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் இருந்து உடை வாங்கி கொடுத்தனர். அதனை அணிந்த பின்பு அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறிய மக்கள், அவர் ஏன்? நிர்வாணமாக ஓடி வந்தார் என கேட்டனர்.

    அதற்கு அந்த பெண், திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த கிரண் என்ற வாலிபர், தன்னை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது ஆடைகளையும் கிழித்து எறிந்து விட்டதாகவும் கூறினார். அதிகாலையில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது தப்பி வந்ததாகவும் கூறினார்.

    இதையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டது. அதன்பின்பு மகளிர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த கிரண் என்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம் போலீசார், ஆற்றிங்கல் சென்று அங்கு பதுங்கி இருந்த கிரணை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் கிரண் வேலை பார்த்த நிறுவனத்தில் அந்த பெண்ணும் வேலை பார்த்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று முன்தினம், அந்த பெண், இன்னொருவருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிரண், அந்த பெண்ணை தன்னோடு வருமாறு அழைத்துள்ளார். முதலில் வரமறுத்த பெண், பின்னர், கிரண் கெஞ்சியதை பார்த்து அவருடன் சென்றுள்ளார். அங்கிருந்து அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த கிரண், கழக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு அந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்ததோடு, அவரது ஆடைகளை கிழித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை செல்போனில் படமும் எடுத்துள்ளார். பின்னர் தன்னை தவிர வேறு யாருடனாவது பேசினால், ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    அன்று இரவு முழுவதும் அந்த பெண்ணை குடோனில் அடைத்து சித்ரவதை செய்த கிரண், அதிகாலை நேரத்தில் தூங்கி உள்ளார். அந்த நேரத்தில் தான் அந்த பெண், குடோனில் இருந்து தப்பி வெளியே வந்துள்ளார். விசாரணையில் தெரியவந்த இந்த தகவல்களை தொடர்ந்து போலீசார் கிரணை கைது செய்தனர்.

    • ராஜ்கேசரின் உடலை அப்பகுதியில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டு தொட்டியில் மறைத்ததையும் அரவிந்த் ஒப்புக்கொண்டார்.
    • அரவிந்த் காதலியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

    பிரயாக்ராஜ்:

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மகேவா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண் ராஜ்கேசர் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

    பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தருமாறு ராஜ்கேசரின் குடும்பத்தினர் யமுனாபர் கர்ச்சனா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளின் பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தினர். இதில் ராஜ்கேசர் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபருடன் போனில் பேசியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அரவிந்த், ராஜ்கேசரை தீவிரமாக காதலித்து வந்ததும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

    மேலும் ராஜ்கேசரின் உடலை அப்பகுதியில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டு தொட்டியில் மறைத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அரவிந்தை கைது செய்தனர்.

    பின்னர் அவரது வீட்டு தொட்டியில் இருந்து ராஜ்கேசர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அரவிந்த் காதலியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு சில பாகங்களை நாய்களுக்கு மனோஜ் உணவாக போட்டு விட்டதால் மற்ற பாகங்கள் என்ன ஆனது என தெரியவில்லை.
    • தாலிகட்டாமல் வாழ்ந்தாலும் எங்களது வாழ்க்கை இனிமையாக சென்றது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே 36 வயது காதலியை 56 வயதுடைய காதலர் மனோஜ் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை குக்கரில் வேக வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காதலியை கொன்றது குறித்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    எனக்கு சொந்த ஊர் போரி விலி ஆகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை இறந்து விட்டார். தாயும் இப்போது இல்லை. நான் கோரே பகுதியில் பால் பண்ணை வைத்து இருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் எனது பண்ணையை அகற்றி விட்டனர்.

    இதனால் போரி விலி மேற்கு பகுதியில் உள்ள ரேஷன்கடையில் வேலை பார்த்தேன். அந்த சமயம் நியூமும்பை வாஷி பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு செல்வேன். 2010-ம்ஆண்டு மார்க்கெட்டில் அகமத் நகரை சேர்ந்த சரஸ்வதி வைத்யாவை பார்த்தேன். அவர் என்னிடம் தான் ஒரு அனாதை என்று கூறினார். இதனால் அவர் மேல் எனக்கு இரக்கம் ஏற்பட்டது. நானும் பெற்றோரை இழந்து தவித்ததால் சரஸ்வதி வைத்யாவை வீட்டில் வேலைக்கு உதவிக்காக அழைத்துச்சென்றேன்.

    நான் அவளை ஒரு மகள் போல பார்த்துக்கொண்டேன். நாளடைவில் அவள் என்னை காதலிக்க தொடங்கினாள். பின்னர் எங்களுக்குள் காதல் வளர்ந்தது. இதனால் கணவன்- மனைவி போல வாழ ஆசைப்பட்டு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மீரா ரோட்டில் உள்ள கீதா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். 2 ஆண்டுகள் கழித்து அதே கட்டிடத்தில் 7- வது மாடியில் உள்ள வீட்டில் குடிபெயர்ந்தோம்.

    தாலிகட்டாமல் வாழ்ந்தாலும் எங்களது வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்த நிலையில் தான் எனக்கு வேலைபறிபோனது. வருமானத்துக்கும் கஷ்டப்பட்டோம். அப்போது தான் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் நான் நிம்மதி இழந்தேன். இதனால் அவளை விட்டு வைத்தால் நன்றாக இருக்காது என நினைத்தேன். கடந்த 4-ந்தேதி எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே நான் அவளை அடித்து உதைத்தேன். இதில் அவள் இறந்து விட்டாள்.

    பயந்து போன நான் என்ன செய்வது என தெரியாமல் விழித்தேன். அப்போது தான் டெல்லியில் காதலன் ஒருவர் காதலி ஷரத்தா வாக்கரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தது நினைவுக்கு வந்தது.நாமும் அதேபோல செய்தால் என்ன? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதற்காக மரம் அறுக்கும் ரம்பம் மற்றும் கத்தியை வாங்கி வந்தேன்.

    சரஸ்வதி உடலை முதலில் 3 துண்டுகளாக வெட்டினேன். இதனால் வீடு முழுவதும் ரத்தம் வழிந்தது. அந்த ரத்தத்தை வாளியில் தண்ணீர் எடுத்து கழுவினேன்.

    உடல் உறுப்புகளை ரம்பம், கத்தியால் சிறிது சிறிதாக வெட்டி குக்கரில் வேக வைத்தேன்.அதனை வெந்நீரில் கழுவினேன். எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் தான் ரெயில்வே தண்டவாளம் உள்ளது.அங்கு எப்போதும் நாய்கள் நிறைய இருப்பதை பார்த்து இருக்கிறேன்.குக்கரில் வேக வைத்த உறுப்புகளை எடுத்துசென்று அந்த நாய்களுக்கு உணவாக போட்டேன். சம்பவத்தன்றும் நான் இதற்காக வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தேன்.

    அந்த சமயம் அடுக்குமாடி குடியிருப்பு நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்த போலீசார் என்னை கைது செய்து விட்டனர். அவர்களிடம் சரஸ்வதி விஷம் குடித்து விட்டு தற்கொலை செய்தாக கூறினேன். போலீசுக்கு பயந்து போய் தான் இதனை வெளியில் சொல்லாமல் அவள் உடலை துண்டு துண்டாக வெட்டினேன் என சொன்னேன். ஆனால் இதனை போலீசார் நம்பவில்லை. பின்னர் நான் சரஸ்வதியை கொன்றதை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு மனோஜ் சனோ தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மனோஜ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. தனக்கு எய்ட்ஸ் இருந்ததால் அதன் பாதிப்பு சரஸ்வதிக்கும் இருக்கும் என்றும் ஒருவேளை தான் இறந்து விட்டால் அவளுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள்? எனக்கருதியும் இந்த கொடூர கொலையை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் காதலி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    கைதான மனோஜ் சனோவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அவரை 16-ந்தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையின் போது கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும்

    கொலையுண்ட சரஸ்வதியின் உடலை 20 துண்டுகளாக மனோஜ் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பாதி உடல் பாகங்களை தான் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதனை போர்வை மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி போலீசார் எடுத்து சென்று ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சில பாகங்களை நாய்களுக்கு மனோஜ் உணவாக போட்டு விட்டதால் மற்ற பாகங்கள் என்ன ஆனது என தெரியவில்லை. அதனை கழிவறைக்குள் வீசி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அந்த பாகங்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • வாடகை வீடு எடுத்து கணவன்- மனைவி போல வாழ்க்கையை தொடங்கினார்கள்.
    • கொலையுண்ட பெண்ணின் உடலில் சில உறுப்புகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மீராரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ்ச கானி (வயது 56). இவர் போரிவிலி பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.

    இந்த நிலையில் இவருக்கும் அகமத் நகரை சேர்ந்த சரஸ்வதி வைத்யா (36) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சரஸ்வதி யாரும் இல்லாத அனாதை என்பதால் அவருக்கு மனோஜ் ஆறுதலாக இருந்து வந்தார். 2 பேருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்றாலும் அதையும் மீறி அவர்களுக்குள் இடையே கள்ளக்காதல் உருவானது. தினமும் தனியாக சந்தித்து தங்கள் உறவை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் தாலி கட்டாமல் குடும்பம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக மீராரோடு கீதா நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 7- வது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன்- மனைவி போல வாழ்க்கையை தொடங்கினார்கள்.

    கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக வசித்தனர். இந்தநிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி 2 பேருக்கும் இடையே சண்டை மூண்டது. இதனால் காதலி மீது மனோஜ் சகானி வெறுப்பு அடைந்தார். தினமும் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்ததால் சரஸ்வதி வைத்யாவை போட்டு தள்ள அவர் முடிவு செய்தார்.

    சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்ததால் ஆத்திரம் அடைந்த மனோஜ் சகானி காதலி சரஸ்வதி வைத்யாவை சரமரியாக அடித்து உதைத்தார். அரிவாளாலும் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். எங்கே போலீசில் சிக்கி விடுவோமோ? என மனோஜ் பயந்தார். அவரது மனதில் கொடூரமான எண்ணம் உதித்தது. அதன்படி சரஸ்வதி உடலை மரம் அறுக்கும் எந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டினார்.

    கை,கால்கள், விரல்கள் என உடல் உறுப்புகள் அனைத்தையும் தனியாக துண்டித்து எடுத்தார். பின்னர் அந்த உடல் உறுப்புகளை ஒரு பெரிய குக்கரில் போட்டு அடுப்பில் வேக வைத்தார். தடயங்களை அழிக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டார்.

    ஆனால் சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை தாங்க முடியாத அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் ஏதோ விபரீதம் நடந்து இருக்கிறது என நினைத்து நயாநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மனோஜ் சகானி தங்கி இருந்து வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.

    அப்போது அங்கு சரஸ்வதி வைத்யா அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டு பாதியாக இருந்தது.

    சமையல் அறையில் இருந்த குக்கரில் வேக வைத்த நிலையில் இருந்த உடல் உறுப்புகளை போலீசார் மீட்டனர். ஒரு பாலிதீன் கவரில் அந்த உறுப்புகளை சுற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த மனோஜ் சகானியை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட பெண்ணின் உடலில் சில உறுப்புகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த உறுப்புகளை மனோஜ் ஏதாவது ஒரு இடத்தில் புதைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுபற்றி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்ன காரணத்துக்காக இந்த கொடூர கொலை நடந்தது என தெரியவில்லை.

    டெல்லியில் கடந்த ஆண்டு மே மாதம் ஷ்ரத்தா வாக்கர் (வயது 26) என்ற பெண் காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொல்லப்பட்டார். தாலி கட்டாமல் அவர்கள் குடும்பம் நடத்தினார்கள். அப்போது ஷரத்தா வாக்கர் தன்னை திருமணம் செய்ய காதலனை வற்புறுத்தினார். இதனால் ஏற்பட்ட தகறாரில் அப்தாப் காதலியை கழுத்தை நெரித்து கொன்றார்.

    பின்னர் ஷரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்தார். 3 வாரம் அதில் வைத்து இருந்த காதலியின் உடல் உறுப்புகளை பின்னர் பிளாஸ்டிக் பையில் சுற்றி குப்பைத்தொட்டி, நீர் நிலைகள், வனப்பகுதியில் வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்திகளை படித்த மனோஜ் அதே போன்று கொலை செய்ய திட்டமிட்டதாவும்,அதனால் காதலி உடலை துண்டு துண்டாக வெட்டியதாகவும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என தெரிகிறது.

    • திருமணம் செய்ய காதலன் மறுத்து விட்டதால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்ததும், இதனால் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
    • பிரேத பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக இருந்தது உறுதியானது. பின்னர் மாணவியின் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது.

    கோத்தகிரி:

    கோத்தகிரியை அடுத்த ஊட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டன்னி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.

    இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்தார்.

    விடுமுறைக்கு ஊருக்கு வந்த மாணவி கடந்த 30-ந்தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தற்கொலை குறித்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

    சம்பவத்தன்று இறந்த மாணவியின் சகோதரி மற்றும் பெற்றோர் வீட்டின் பீரோவில் இருந்த செல்போனை எடுத்து பார்த்தனர்.

    அப்போது மாணவி, பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவரான நந்தகுமார்(32) என்பவருடன் அதிக முறை பேசியிருப்பது ரெியவந்தது. இதையடுத்து அவர்கள் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில், மாணவியும், வீட்டின் அருகே வசிக்கும் நந்தகுமார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

    நெருங்கி பழகியதில் மாணவி கர்ப்பமாகி விட்டார். இதையடுத்து மாணவி, வாலிபரை தொடர்பு கொண்டு தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார்.

    ஆனால் அந்த வாலிபர், நீ வேறு ஜாதி, நான் வேறு ஜாதி. உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்து விட்டார். மாணவி திருமணம் செய்ய வற்புறுத்தியதால், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை மாணவிக்கு அந்த வாலிபர் அனுப்பி உள்ளார்.

    திருமணம் செய்ய காதலன் மறுத்து விட்டதால் மாணவி கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்ததும், இதனால் அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மாணவி கர்ப்பமாக இருக்கிறாரா என்பதை அறிய புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி ஊட்டி ஆர்.டி.ஓ., துரைசாமி உத்தரவின் பேரில், தாசில்தார் ராஜசேகரன், வி.ஏ.ஓ., அஜய் கான், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில், தொட்டன்னி பகுதியில் புதைக்கப்பட்ட மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    பிரேத பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக இருந்தது உறுதியானது. பின்னர் மாணவியின் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த நந்தகுமாரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×